Thursday, August 17, 2017

வஞ்சகம்

"என் பேச்சைதட்டமாட்டா(ன்)" 
என்று 
மகனை சான்றோர்  
ஆக்குவதைவிட
மருமகளை போன்றோர் 
ஆக்கும்பொழுது
வென்றுவிடுகிறது பக்கத்து வீட்டம்மாவின்
மோடித்தனம் !! 

பி.குகடைசி வார்த்தை வினைச்சொல் ட்டுமே ! 

சகோதரரின் மரணம்

கடவுளையும்பேயையும்
கேள்விக்குறியாக்கி
அழுத்தமாய் 
முற்றுப்புள்ளியிட்டது 
விதி !!!

Saturday, October 22, 2011

பரிசு

என்
பிறந்த நாளையே
சிறிதொரு தாளாய்கூட
கருதியதில்லை வாழ்
நாட்களில்

நின்
பிறந்த நாளைத்தவிர
பிறிதொரு நாளும்
தெரிவதில்லை நாள்
காட்டியில்

இவ்வுலகத்தின்
அத்துனை அழகையும்
ஆச்சிரியங்களையும் உன்னுள்
ஜனித்தநள் நாள்
இதுவே

பரிசிற்காக
பரியர்த்தனமாய் ஆராய்ந்ததில்
இலங்கை வேந்தனை விட
ஒராயிரும்முறை கலங்கினேன்
நானும்

நின்
செவ்விதழ்களையும் மென்மையும்
உபயமாய் கொண்டு
பூக்களை கொய்தால்
வாடிப்போகும்

நின்
கண்களின் ஒழியை
உபயமாய் கொண்டு
ஆபரணங்களை கொடுத்தால்
பழுதாகிபோகும்

நின்
புன்னகையின் பூரிப்பை
உபயமாய் கொண்டு
பரிசேதேனும் அனுப்பினால்
பழதாகிபோகும்

என்ன
கொடுத்திட என்
கண்மணிக்கு என்னைவிட
சிறந்ததென்று ஏதேனும்
காணோம்

என்
வாழ்க்கை முழுவதும்
உன் மென்மைக்காக
உன் செவ்விதழ்களுக்காகஉன் கண்களுக்காக
உன் புன்னகைக்காக
உனக்காக மட்டுமே
வாழ்வதை தவிர
வேறேதேனும் பரிசுண்டோ
என் உயிரின் ஸ்பரிசமே !!!